இலங்கைப்பெண்- ஆர்யா விவகாரம்; அதிரடி திருப்பம்! கைதான நபர்கள்
நடிகர் ஆர்யா என நடித்து ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் மோசடி செய்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் பொலிஸாருக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து, சுமார் 70 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று, பின் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக , நடிகர் ஆர்யா மீது புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்யாவிடமும் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பொலிசாரின் தொடர் விசாரணையில் நடிகர் ஆர்யாவிற்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. அத்துடன் , விசாரணையில், சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், சமூக வலைதளத்தில் நடிகர் ஆர்யாவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜெர்மனி வாழ் இலங்கைத் தமிழ் பெண்ணிடம் பேசி ஏமாற்றியுள்ளனர்.

அத்துடன் , நடிகர் ஆர்யாவின் பெயரில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 70 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததும் தெரிய வந்தது. இந்த குற்றச் செயலுக்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரின் தனிப்படையினர், குற்றவாளிகள் இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் இன்று கைது செய்தனர்.
I would like to thank Commissioner of Police @chennaipolice_
— Arya (@arya_offl) August 24, 2021
Additional Commissioner of Police-Central Crime Branch and
Cyber Crime Team of Chennai city for arresting the Real culprit. It was a real mental trauma which I never expressed. Love to everyone who believed in me ?
அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து 2 செல் போன்கள், 1 லேப் டாப், 1 ஐபேட் மற்றும், 65 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
இந்நிலையில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்த பொலிசாருக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.