லண்டனில் உணவகத்தால் சாதனை படைக்கும் இலங்கைத் தமிழ் இரட்டை சகோதரிகள்!
இலங்கையின் கண்டியில் பிறந்து, கொழும்பில் வளர்ந்த வசந்தினி, தர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகள் லண்டனில் ஹொட்டல் துறையில் பிரபல்யமடைந்து வருகின்றனர் .
வசந்தினி, தர்ஷினி , 2011ஆம் ஆண்டு தங்கள் மற்ற சகோதரிகளுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
Karapincha உணவகம்
லண்டனில் பல இடங்களுக்குச் சென்று பார்த்தும் இலங்கை உணவு கிடைக்காததால், சகோதரிகளுக்கு லண்டனில் இலங்கை உணவகம் அமைக்க யோசனை தோன்றியுள்ளது.
அதன் விளைவாக கறபிஞ்சா ( Karapincha) என்ற உணவகத்தை சகோதரிகள் வசந்தினி, தர்ஷினி நிறுவியுள்ளனர்.
தங்கள் தாயிடம் கற்ற தமிழர்களின் உணவு செய்முறையையும், தங்களை கவனித்துக்கொண்ட பெண்ணிடம் கற்ற சிங்களவர்களின் உணவு செய்முறையையும் கைகொடுக்க உணவகம் ஆரம்பித்த சகோதரிகள், பின்னர் நான்கு உணவகங்களை அமைத்துள்ளனர்.
தங்கள் தாயைப் போலவே, உணவகத்துக்குத் தேவையான மசாலா பொடிகளையெல்லாம் தாங்களே தயார் செய்து, வீட்டுச் சுவையில் உணவுகளை தயாரித்து வழங்குகிறார்களாம் சகோதரிகள்.
இந்நிலையில் எமது உணவுக்காக லண்டன் வாழ் இலங்கையர்கள் மத்தியில் இந்த சகோதரிகளின் உணவகம்க் பிரபல்யமடைந்துள்ளதாம்.