இந்திய துணைத்தூதுவரால் கெளரவிக்கப்பட்ட இலங்கை மாணவிகள்
இந்திய துணைத்தூதுவரால் முல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஆசாதிக அம்ரித்மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு தொகுதியாக இந்திய துணை தூதரகத்தின் வடக்கு மாகாண கல்வி கலாச்சார அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து 5 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி ஒன்றினை இணையவெளியில் நடத்தியுள்ளது.
இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். முதல் இடத்தை செல்வி சுப்ரமணியம் சுடர்செல்வி என்னும் தரம் 13 படிக்கும் மாணவியும், இரண்டாம் இடத்தை செல்வி மயில்வாசன் தினேகா மல்லாவி என்ற மாணவியும், மூன்றாம் இடத்தை செல்வி சசிகுமார் ஷர்மிகா என்ற மனைவியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு இந்திய துணை தூதுவர் சான்றிதழும் மற்றும் 5 ஆயிரம் ரூபா பணமும் அளித்து கெளரவித்தார்.