வரலாற்று சிறப்புமிக்க நகரில் முதலாவதாக தரையிறங்கிய இலங்கை விமானம்!
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவிலன் குஷிநகர் சர்வதேச விமான நிலையம்m இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை விமானம் அங்கு முதலாவதாக தரையிறங்கியது.
இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர், குஷிநகர் விமான தளத்தில் தரையிறங்கினர்.
அத்துடன் இந்த விமானத்தில் 100 பெளத்த பிக்குகள் பயணித்தமை விசேட அம்சமாகும். கெளத்தம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த வரலாற்று சிறப்புமிக்க புனித நகராக குஷிநகர் விளங்குகின்றது.
🇱🇰 Cabinet minister for youth & sports @RajapaksaNamal speaking on the importance of Kushinagar international airport, launched by PM Modi today.@CassilingamG @ShishirGoUP @IndiainSL pic.twitter.com/g4efr8mhqG
— Ashish Singh (@AshishSinghNews) October 20, 2021
பெளத்தர்களின் புனித நகரில் திறக்கப்பட்ட சர்வதேச விமான தளத்தில், இலங்கை விமானம் முதலாவதாக தரையிறங்கியமை வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.