தேர்தலை நடத்த அஞ்சும் இலங்கை அரசாங்கம்! சம்பிக்க வெளியிட்ட தகவல்
மொட்டு கட்சிக்கு அதே மக்கள் ஆணை தற்போது இல்லை. அதனால்தான் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது." என நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
'ராஜபக்சக்களின் 'மொட்டு'க் கட்சிக்குக் கடந்த தேர்தல்களில் வழங்கப்பட்ட மக்கள் ஆணை தற்போது இருக்கின்றதா?' என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மக்களின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்கு தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தியபோதுதான் தெரிந்தது மக்கள் இருப்பது 'மொட்டு'வின் பக்கம் என்று.
அதேபோல், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலும் விரைந்து நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆணை யாருக்கு எனபதை அனைவரும் அறியமுடியும்.
இருப்பினும், கடந்த முறை போல் இம்முறையும் மக்கள் ஆணை கிடைக்காது என்ற அச்சத்தில்தான் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயங்குகின்றது" - என்றார்.