யாழ்ப்பாண பெண் சாரங்கா பாடிய பாடல்களுக்கு குவியும் உலக வாழ் தமிழர்களின் ஆதரவு!
தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாரங்காவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
சாரங்கா இறுதியாக சரிகமப நிகழ்ச்சியில் பாடிய எழுச்சி பாடலுக்கு புலம் பெயர் தமிழர்கள் முதல் உலக வாழ் தமிழர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர் பாடிய பாடல்கள் சில இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.
குறித்த நிகழ்ச்சியில், பல திறமையான பாடகர்கள் கலந்துகொண்டு போட்டி போட்டுவரும் நிலையில் இவருக்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
குறித்த நிகழ்ச்சியில் வெற்றிபெற, பலரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.