இலங்கையின் பொருளாதார நெருக்கடி; பாஜகவுக்கு சீமான் எச்சரிக்கை
இலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு சிங்கள இனவாத அரசுகளின் கொடுங்கோன்மை ஆட்சியும், இனவெறிச்செயல்பாடுகளுமே காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
சிங்கள ஆட்சியாளர்களின் தவறான ஆட்சி முறையினால் இலங்கை கடும் பொருளாதார நலிவைச் சந்தித்து, மக்கள் வீதியில் நின்றுப் போராடுகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவோடு இணக்கமாக இருக்கும் இலங்கை நாட்டை அனுசரித்துச் செல்லும் போக்கு, மோசமானப் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இந்தியாவை ஆளும் கட்சியான பாஜக அரசை எச்சரிக்கிறேன் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.