மீண்டும் செயல்பட தொடங்கியது இலங்கை ஜனாதிபதி அலுவலகம்!
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்தின் மீது கடும் கோபம் அடைந்த அந்த நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொழும்புவில் உள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடைத்தனர்.
அப்போது முதல் ஜனாதிபதி அலுவலகம் செயல்படாமல் இருந்து வந்த சூழலில் கடந்த 9-ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடியதோடு, பல நாட்கள் அங்கேயே தங்கினர்.
இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் அலுவலகத்துக்குள் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் பொலிஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
அதை தொடர்ந்து, 107 நாட்களுக்கு பிறகு ஜனாதிபதி அலுவலகம் நேற்று திறக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து தங்களின் வழக்கமான பணிகளை தொடங்கினர்.