அடுத்த இரு தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும் (19, 20 திகதி) மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய நாளைய தினம் A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறே P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 10 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும், மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஞாயிறு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறே P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.