69 ஆண்டுகளுக்கு பின் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் ஹர்த்தால் ; அப்போதைய பிரதமர் விலகினார்; தற்போதைய அரசாங்கம்?

Sri Lankan protests Sri Lanka Economic Crisis Gota Go Home 2022 Rajapaksa Family
By Sulokshi May 06, 2022 06:21 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  1953 ஆம் ஆண்டில் இல்ங்கையில் முழு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க பதவி விலகினார். அதன் 69 ஆண்டுகளுக்கு பின்னர் இம்முறைதான் முழு அளவில் ஹர்த்தால் இடம்பெறுகின்ற நிலையில் அரசாங்கம் பதவி விலகுமா எனற் கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங் கத்தை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் பூரணஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டங்களையும் தொடர் போராட்டங்களையும் முன்னெமடுத்துத் தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

எனினும் ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க் காமல் எதேச்சாதிகாரமாக ஆட்சி புரிந்துவருகின்றனர். மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாகச் செயற்பட்டு வரும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராகக் கடந்த 28ஆம் திகதி அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள்இணைந்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தைமுன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த் தாலை முன்னெடுப்பதற்கு தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிலையம்அழைப்பு விடுத்துள்ளது. சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், கல்வி உட்பட்ட இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இன்றைய ஹர்த்தாலுக்குத்தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவாக நேற்று நள்ளிரவு முதல் இன்றுநள்ளிரவு வரை ரயில்வேத் தொழிற்சங்கத்துடன் இணைந்த சுமார் 40 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மேலும் ஹர்த்தாலுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வங்கித் தொழிற்சங்கங்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் இன்றைய ஹர்த்தாலில் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத் துறை ஊழியர்களும் இன்றுவேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அதேநேரத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர்கள் கையில்கறுப்புப் பட்டி அணிந்து இன்றைய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்பார்கள். இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு ஆத ரவாக வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடி ஒத்துழைக்குமாறும், பொதுமக்கள்தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளைஏற்றிவைக்குமாறும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை ஒலிபெருக்கி மூலம் பிரார்த்த னைகளை நடத்துமாறும் ஹர்த்தால் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபடுவ தையோ அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதையோதவிர்த்து அமைதியான முறையில் போராட்டங்களைத் தொடருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுப்பதற்குத் தவறினால் 11 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான ஹர்த்தாலாக இது மாற்றப்படும் எனவும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை 1953 ஆம் ஆண்டிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க பதவி விலகினார். அதன்பின்னர் இம்முறைதான் இலங்கை முழு அளவில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US