லிட்ரோ எரிவாயு பாவனையாளருக்கு ஒரு முக்கிய தகவல்!
நாட்டில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க (Desara Jayasinghe) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் 1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 1311 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் இந்த காப்புறதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காப்புறுதி திட்டத்தின் மூலம் இதுவரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே விண்ணப்பித்துப் பயன்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.