இரண்டாக உடையும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் 95 ஆசனங்களைப் பெற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆசனங்களை மாத்திரமே பெற்றன.
அவர்களுள் 9 பேர் ரணில் ஜனாதிபதியானதும் ரணிலின் அரசில் இணைந்துகொண்டனர். 5 நாடாளுமன்ற உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாகப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உட்கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பக்கமும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னொரு பக்கமும் செல்வதற்கு வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகின்றது.