ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு... பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை!
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 திகதி ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள், குடிமக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை சிறந்த முறையில் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (26-07-2024) நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இன்று நாடாளுமன்றத்தில் கூடிய போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.