இரண்டு வங்கியிடமிருந்து கடன் உதவிகளை பெறமுடியும்! ரணில்

Ranil Wickremesinghe Sri lanka Crisis GotabayaRajapaksa Economic Crisis GoHomeGota Sri lanka Crisis
By Shankar Apr 05, 2022 09:47 PM GMT
Shankar

Shankar

Report

இலங்கையின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக நிதியமைச்சர் நிறைவேற்று சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த அரசியல் பிரச்சினைக்கு அப்பால் மக்களுக்கு பாரிய பிரச்சனை இருந்து வருகின்றது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (05-04-2022) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத்தொடர்ந்து, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் எனது பாராளுமன்ற வரலாற்றில் ஒருபோதும் காணாதவையாகும். ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை மக்கள் சுற்றிவளைத்திருந்தனர்.

இந்நிலைக்கு நாடு சென்றிருக்கின்றது. இந்த நிலைமைய மாற்றவேண்டும். மக்கள் நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராகவே குரல் கொடுக்கின்றனர். அந்த பிரச்சனையை அரசாங்கம்தான் தீர்க்கவேண்டும். அதனை எங்களால் செய்ய முடியாது.

ஆனால் நாடாளுமன்றம் என்ற வகையில் நாங்கள் எவ்வாறு முன்னுக்கு செல்வது என்பது தொடர்பாகவே இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த அரசியல் பிரச்சனைக்கு அப்பால் பாரிய பிரச்சனை இருந்து வருகின்றது.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லை. எரிபொருள் இல்லை, காஸ் இல்லை, மின்சாரம் இல்லை. இந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எமக்கு டொலர் இல்லை. டொலரை எவ்வாறு பெற்றுக்கொள்வது என கலந்துரையாடவேண்டும்.

டொலரைப் பெற்றுக்கொள்ள நாட்டின் தற்போதைய கையிருப்பு டொலர் பில்லியன் இரண்டா அல்லது 600 மில்லியனா என்பதை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல தீர்மானித்திருக்கின்றது.

ஆனால் அங்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது அதாவது, எமது நாட்டில் பொருளாதார பிரச்சினை இல்லை என எமது அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வார்த்தையை ஆரம்பமாக நீக்கிக்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக நிறைவேற்று சபையில் கலந்துரையாடி பிரேரணை ஒன்றை நிறைவேற்றுங்கள் அவ்வாறு இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதில் பயனில்லை. அத்துடன் நாட்டின் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்குத் தயாராகி வருகின்றது.

இந்தநிலையில் நிதியமைச்சர் நிறைவேற்று சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலம் நாம் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிதியின் மூலம் எமக்கு தேவையான மருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். அதேவேளை நிதிக்குழுவின் தலைவர் வங்கிகளின் தற்போதைய நிலைமையை கவனத்திற்கொண்டு வங்கிகளைப் பாதுகாப்பதற்கான வலையமைப்பொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டத்தை விடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவுசெலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போதைய நிலைமையில் ஜனாதிபதிக்கு செயற்படமுடியாமல் இருக்கின்றது. அதனால் நாடாளுமன்றம் என்றவகையில் நாட்டின் தேவைகளை மேற்கொள்ள நாங்கள்தான் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்றார்.  

மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US