இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத நாள்: மக்களின் துயரத்தை கண்டுகொள்ளாத ராஜபக்சக்கள்
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு இன்று (21-04-2022) நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டன.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி இன்று வரையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், தற்போதைய ஆட்சியில் உள்ளவர்கள் மக்களின் துன்பங்கள், வறுமை, பட்டினி, என எதையும் பொருட்படுத்தாமல் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
வவுனியா மாவட்டம்:
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல் நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (21-04-2022) இடம்பெற்றது.
மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன், இரங்கல் உரைகளும் இடம்பெற்றிருந்தது.
திருகோணமலை மாவட்டம்:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ளது.
இதனை முன்னிட்டு திருகோணமலை – தியாகிகள் அரங்குங்கு முன்னாள் உள்ள கடற்கரையி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி இன்று மாலை இடம்பெற்றது.
இதில் சர்வமதத் தலைவர்கள், இளைஞர்கள், நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
கல்முனை மாவட்டம்:
கடந்த 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனையுடனான கவனயீர்ப்பு போராட்டம் கல்முனை மெதடிஸ்ட திருச்சபை வளாகத்தில் இடம்பெற்றது.
இப்பிரார்த்தனையுடனான கவனயீர்ப்பு போராட்டத்தில் குண்டுத்தாக்குதலில் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாகவும் உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் இங்கு கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டது.
மன்னார் மாவட்டம்:
கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மாலை 6 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதலின் போது உயிர் நீத்த மக்களை நினைவுகூரும் வகையில் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மத தலைவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்டம்:
தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கோரி இன்று மாலை புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
[NNJ6H ]
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவலுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிவாறும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.