யாழ் ஆலயத்திற்குள் நுழைந்த ஞானசார தேரர்!
நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகிவரும் நிலையில் , அந்த நிலைமை நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் இன்று சிறப்பு யாகம் இடம்பெற்றது.
இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணர் ஆலயங்களில் இவ்வாறு பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் இப் பூஜை வழிபாடு இடம்பெற்றது.
பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள் சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினை நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே சிறீ விமல ஆகியோர் ஏற்பாடு செய்த இப் பூஜை வழிபாட்டில் கலபொட அத்துரலிய ஞானசார தேரரும் கலந்துக்கொண்டார்.