கொழும்பில் விசேட போக்குவரத்து ; பொலிஸாரின் அறிவுறுத்தல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட போக்குவரத்து
அதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் காலி முகத்துவாரம் மற்றும் கொழும்பில் உள்ள பல வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் இந்த விசேட போக்குவரத்து திட்டமானது இன்று, நாளை மறுதினம் மற்றும் பெப்ரவரி 1, 2, 3 மற்றும் 4 ஆம் திகதி வரையில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.