நாமல் ராஜபக்க்ஷ இல்லத்தில் விசேட பிரார்த்தனை!
ஆழிப் பேரழிவில் உயிரிழந்த மக்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து நாமல் ராஜபக்க்ஷ வழிபாடுகளை முன்னெடுத்தார்.

மனவேதனையுடன் நினைவு கூர்ந்தேன்
சமய வழிபாடுகளின் பின்னர், நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
"நாட்டையே உலுக்கிய ஆழிப்பேரலை ஏற்பட்டு 21 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய நாளில், அந்த அனர்த்தத்தினால் எம்மிடமிருந்து விடைபெற்று சென்ற அன்பிற்குரிய மக்களை மிகுந்த சோகத்துடன் நினைவு கூர்ந்தேன்.
அதேபோல், அண்மைய அனர்த்த நிலைமைகள் காரணமாக உயிரிழந்த மக்களையும் மனவேதனையுடன் நினைவு கூர்ந்தேன் என குறிப்பிட்டார்.
அத்துடன் இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் நாம் ஒரு தேசமாக மீண்டும் எழுந்து நின்றோம்.
எத்தனை தடைகள் ஏற்பட்டாலும், பாரிய அபிவிருத்திகள் ஊடாக இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினோம்.
இனிவரும் காலங்களில் இத்தகைய பேரழிவுகள் மீண்டும் ஏற்படக் கூடாது எனப் பிரார்த்திக்கின்றேன் என நாமல் ராஜபக்க்ஷ தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.