இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!
நாட்டின் நிதி அமைச்சர் எனும் வகையில் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளையொன்றினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
இதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டும், சர்வதேச கொடுக்கல்வாங்கல்களை மேலும் வசதிப்படுத்தும் நோக்குடனும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும், இந்த கட்ட்ளை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
குறித்த புதிய கட்டளையானது 2023.06.28 தொடக்கம் 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும். இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல் பின்வருமாறு,