சாந்தண்ணாவின் சில உண்மைகள்; சகோதரர் வெளிப்படுத்திய தகவல்!

Jaffna Rajiv Gandhi Tamil nadu trichy
By Sulokshi Mar 06, 2024 10:23 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்த சாந்தன் தாயக திரும்ப காத்திருந்த நிலையில் உடல்நகுறைவால் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி சென்னையில் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து அவரது உடல் இலங்கைக்கு எடுத்துவரப்படு இறுத்திக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்களன்று மக்களின் கண்னீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்படிருந்தார். சாந்தனின் மரணம் ஈழத்தமிழர்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவை வெறுக்க காரணமானது.

கடைசி வரை சாந்தனை தன் தாயை பார்க்கவிடாது, பிணம்மாகவே இந்தியா தாயகத்துக்கு அனுப்பிவைத்தமை தமிழர் மனங்களில் ஆறாத ரணமாக பதிந்துவிட்டது.

சாந்தண்ணாவின் சில உண்மைகள்; சகோதரர் வெளிப்படுத்திய தகவல்! | Some Facts About Santan Information Revealed

இந்நிலையில் தனது சகோதரர் சாந்தன் தொடர்பில் மதிசுதா வரது முகநூலில் பதிவொன்றினை இட்டுள்ளார். அந்த பதிவில்,

மறைக்கப்படும் மற்றும் திரிபுபடுத்தப்படும் வரலாறுகளை, மற்றவர்க்கு பாதிப்பற்ற வண்ணம் சொல்ல வேண்டிய கடமையானது குடும்ப உறுப்பினரான எனக்கு என்றும் உண்டு. இத்தகவல்கள் அவரிடம் நேரடியாகவும், பொ.அம்மான் மூலமாகவும், அவரது சக போராளிகளூடாகவும் பெறப்பட்டதுடன் நான் குறிப்பிடுபவை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவை மட்டுமேயாகும்.

1) உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனில் 1988 ம் ஆண்டு உயர்தர பிரிவில் கற்கும் காலத்திலேயே பாடசாலைச் சீருடையுடன் இந்திய இராணுவத்துக்கு எதிரான பல தாக்குதல்களை திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறார். அத்தாக்குதல்களை நடைமுறைப்படுத்திய அண்ணாக்களாக (சலாம் , டேவிட், கோபு, அர்ஜுணா, ரகுவரன், நீலன் இன்னும் பலர்)

2) உயர்தர பரீட்சையின் பின் நேரடிப் போராளியாக பணியாற்றியிருக்கிறார்.

3) வணிகவியல் உயர்கல்விக்காக படகு மூலம் இந்தியா சென்றவர் தனக்களித்த பணியாக EPRLF அலுவலகத்துக்கு முன் வீட்டில் வாழ்ந்ததுடன் பத்மநாபா அவர்களின் மரணத்திற்கு முதலே நாடு திரும்பியிருக்கிறார். இத்திட்டமிடல் தொடர்பாக அல்பிரட் துரையப்பா முதல் காமினி திசாநாயக்கா வரை என்ற தொடரில் அற்புதன் அவர்களால் கால ஆதாரங்களுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பத்மநாபா கொலை வழக்கு தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் சாந்தன் அவர்களுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் விதித்திருந்தது.

4) இலங்கை திரும்பியவர் "தினேஷ்" என்ற பெயரில் முழுத் தீவுகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். தீவுகளில் மக்களுக்கு அவர் செய்த பணிகள் பற்றி , அவரது இறுதி அஞ்சலிக்காக தீவில் இருந்து திரண்ட மக்கள் பல கதைகள் பேசினார்கள்.

5) 1991 ம் ஆண்டு இந்தியா சென்று கிட்டு அண்ணாவுக்கு பதிலாக இலண்டனில் தங்கி பணி செய்து கொண்டு அவரை தாயகம் திரும்ப வைத்தல் என்ற நோக்குடன் அனுப்பப்பட்டார்.

இலங்கை இந்திய இராணுவத்தின் மிக நெருக்கடியான காலத்திலும் அத்தனை போராளிகளுக்கும் உணவு தயாரிப்பதுடன் மறைமுக அரணாகவும் இருந்த எமது இல்லத்தை கல்வீடாக மாற்றுவதற்கு சீமேந்து பைகள் அளித்ததுடன் அதை குடிபூர்ந்து வைக்க வந்த பொ.அம்மான் அவர்கள் குறிப்பிட்டது "நீங்கள் எங்களுக்குச் செய்த தியாகம் போதும் அவனை நாங்கள் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் அவன் உங்கள் குடும்பத்தை பார்க்கட்டும்." என்பதுடன் அப்பாவை புலனாய்வுத்துறையின் வாகனங்களுக்குரிய பொறுப்பாளராகவும் நியமித்தார்.

பிற்காலத்தில் மல்லாவி வரும்போதெல்லாம் அம்மாவிடம் ஒரு பிடியாவது வாங்கி உண்டு செல்லும் அம்மான் மேற்குறிப்பிட்ட உண்மையை கூறினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிவராசண்ணாவின் பணத்தை கையாண்டதைத் தவிர இவர் சம்மந்தப்படவில்லை.

குண்டுச் சாந்தனின் குற்றச்சாட்டுக்களை சாந்தன் மேல் போட்டேன் என விசாரணை அதிகாரியே பகிரங்கமாக கூறி வருத்தம் தெரிவித்திருந்தார். தூக்கத்தில் வைத்து கைது செய்யப்படும் போடும் சயனைட் உட்கொள்ள முற்பட்ட வேளையே சாந்தனை பொலிசார் தடுத்து காப்பாற்றியிருந்தனர் என  அவர்  பதிவிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US