ஊற வைத்த வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா!
நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை இளமையிலேயே நரைமுடி தான். தற்போதை கால கட்டத்தில் வேலை , அலுவலகம், டென்க்ஷன் என எமது வாழ்க்கை நகர்ர்ந்துகொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக கணடதையும் சாப்பிட்டு கண்ட நேரத்தில் தூங்கி வழிகின்றோம். இதன் காரணமாக பல்வேறு உபாதைகளிற்கு ஆளாகின்றோம். அந்த வகையில் தற்போதைய இளம் பிராயத்தினருக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது இளநரை.

இளநரை
இந்த இளநரையை போக்க வெந்தயம் மிகச்சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது. வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வு மற்றும் இளநரையை போக்கும்.

வெந்தயத்தை தேங்காய் என்னுடன் சேர்த்து தலைக்கு தேய்த்தாலும் தலை முடி உதிர்வை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதோடு ஊற வைத்த வெந்தயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவை சேர்த்து தலையில் அரைத்து பூசி குளித்தால் இளநரையை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது வெந்தயத்தில் நன்றாக நீரில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவினால் முகம் பொலிவு வரும் என்றும் பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசலாம் என்றும் கூறப்படுகிறது.
இரவு முழுவதும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அந்த நீரைக் கொண்டு முகத்தினை கழுவினால் தோலில் ஈரப்பதம் அதிகமாகும்.