ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார்? மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (17) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர் தொடர்பில் ராஜபக்சவிடம் கேட்டபோது,
“தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் இப்போது எங்களிடம் உள்ளது. நற்செய்தி என்னவென்றால் நாங்கள் வெற்றி பெறுவோம்.
வேட்பாளரை முன்வைக்கும் போது, அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது புரியும். நாங்கள் எப்போதும் ஒரு பொது வேட்பாளரையே முன்வைத்தோம்.
அடுத்து எமது அரசாங்கமே வரும். ஜனாதிபதி எங்களுடன் பயணிக்கத் தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு முழு ஆதரவளிப்போம்" என்றார்.