சபாநாயகர் இராஜினாமா நாடகம்! கடுமையாக சாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சம்பந்தப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் நாடகம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தன (Mahela Jayawardene) கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, (Ranjith Siyambalapitiya) மீண்டும் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
Is this a joke? time and money wasted as if this appointment was the most pressing matter they had to do in this current crisis and he resigns again ?♂️ can everyone @SLparliment resign and stay home please ?? #GoHomeGota https://t.co/d8rylAg5e7
— Mahela Jayawardena (@MahelaJay) May 6, 2022
“இது நகைச்சுவையா? தற்போதைய நெருக்கடியில் அவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் இந்த நியமனம் என்பது போல் நேரத்தையும் பணத்தையும் வீணடித்தது, மேலும் அவர் மீண்டும் இராஜினாமா செய்கிறார் என்று மஹேல டுவீட் செய்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் இராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருக்க முடியுமா என்று அவர் மேலும் கூறினார்.