பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வராத அதிபர், ஆசிரியர்களுக்கு பறந்த கடிதம்
கடந்த மார்ச் 15ஆம் திகதி தங்காலை நகர மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளாமை தொடர்பாக தங்காலை வலயக் கல்வி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

உத்தியோகபூர்வ கடிதங்கள்
இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்பியுள்ளார்.
குறித்த கூட்டத்திற்கு ஆசிரியர்கள் சமூகமளிக்காததற்கான காரணங்களை தெளிவுபடுத்தி, மார்ச் 26ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரசு இயந்திரத்தின் செயற்பாடுகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே பிரதமரின் தலைமையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.