முகத்திற்கு ஆவி பிடிப்பதால் சரும ஆரோக்கியத்தில் இத்தனை நன்மைகளா?
வேலைக்காக ஓடித்திரியும் இந்த காலக்கட்டத்தில் தினசரி நமது சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு நமக்கு நேரம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுகின்றீர்களா?
இதற்காக தான் தற்போது வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கென மிக எளிமையாக செய்யக் கூடிய வீட்டு பராமரிப்புகளின் ஒன்றான நீராவி பிடிக்கும் முறையுள்ளது.அவ்வாறு நீராவி பிடிப்பதால் சரும ஆரோக்கியத்தை பெற என்னென்ன நன்மைகளை பெலாம் என நாம் இங்கு பார்ப்போம்.
முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும்
முகத்தில் நீராவி பிடிப்பதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு இது உதவுகிறது. நீராவி பிடிப்பதால் முகத்தில் உள்ள துளைகள் திறக்கப்பட்டு துளைகளின் உள்ளிருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகள் வெளியேற்றப்படுகின்றன. மேலும் இது சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது. சருமத்தில் உள்ள வெடிப்புகள் போன்றவற்றை சரி செய்வதற்கு இந்த நீராவி பிடித்தல் பராமரிப்பு முறை உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்
நீராவி பிடிப்பது நமது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் முடித்தவுடன் நீராவி பிடிப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும். சருமத்திற்கு பளபளப்பு தன்மையை பெற்றுத் தரவும் இந்த முறை உதவுகிறது. நீராவிலிருந்து வரக்கூடிய வெப்பம் நமது இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தில் ஆக்ஸிஜன் சீராக செல்ல உதவுகிறது. இது சருமத்திற்கு பளபளப்பு தன்மையை தருவது மட்டுமல்லாமல், இயற்கையான முறையில் சருமத்தில் உள்ள பாதிப்புகளை சரி செய்யவும் உதவுகிறது.
முகப்பரு வராமல் தடுக்கும்
வாரத்திற்கு ஒருமுறை முகத்தில் நீராவி பிடித்தல் முகப்பரு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. முகத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகளை நீக்குவதன் மூலம் இவை தடுக்கப்படுகின்றன. மேலும் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களையும் அழித்து வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. மிருதுவான சருமத்தை பெறுவதற்கு இந்த முறை உதவுகிறது. பியூட்டி பார்லர்களில் இது போன்ற ஆவி பிடிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதே முறையை தான் நாம் வீட்டிலேயே பயன்படுத்த முடியும்.
சருமத்தில் வறட்சி அடைவதை தடுக்கும்
சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுப்பதற்கு வாரத்திற்கு ஒரு முறை நீராவி பிடித்தல் உதவுகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சரும வறட்சியை தடுக்க உதவுகிறது. நீராவி பிடிப்பதன் மூலம் சருமத்தில் நீர் சத்து குறைபாட்டினை தடுக்க முடியும். சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறுவதற்கு இந்த முறை உதவுகிறது. பெரும்பாலும் குளிர் காலங்களில் இது போல செய்யும் போது சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
முகத்திலுள்ள கரும்புள்ளி குறையும்
ஒரு சிலருக்கு சருமத்தில் அதிகமாக கரும்புள்ளிகள் இருக்கும். அது அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம். கரும்புள்ளி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் வாரத்திற்கு இரு முறை நீராவி பிடிப்பதன் மூலம் அதனை சரி செய்ய முடியும். சருமத்தின் துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்குகளை வெளியேற்றுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இது சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்கிறது. பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் இல்லாமலேயே உங்களால் இதனை செய்ய முடியும்.