மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!

Batticaloa Crime Women
By Sulokshi Mar 31, 2026 12:03 PM GMT
Report

மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்! | Shocking Testimony Woman Survived Batticaloa Well

வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?

இந்நிலையில் குறித்த பெண் அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்  பாதிக்கப்பட்ட பெண்  விளக்கமளித்தார்,  சம்பவம்  தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், 

  நான் அற்றைய தினம் காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பிற்குச் செல்வதற்காக, எனது குழந்தையுடன் வவுணதீவு சந்தி பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு வயோதிபப் பெண்ணும் பேருந்துக்காகக் காத்திருந்தார்.

மட்டக்களப்பில் மனைவியை சுட்ட கணவன்; சம்பவத்தால் ஷாக்!

மட்டக்களப்பில் மனைவியை சுட்ட கணவன்; சம்பவத்தால் ஷாக்!

அப்போது அங்கு வந்த ஒரு முச்சக்கரவண்டி எங்களை எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டது. நான் மட்டக்களப்பு நகருக்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோது, எம்மை ஏறுமாறு கூறினர். என்னிடம் போதிய பணம் இல்லை என்று கூறியபோது, 100 ரூபா மட்டும் தருமாறு கூறினர்.

அதனை ஏற்று நானும் அந்த வயோதிபப் பெண்ணும் அதில் ஏறினோம். முச்சக்கரவண்டி நகரை நோக்கிச் சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கிக்கொண்டார்.

  கையில் கத்தியுடன் (தாள்கத்தி) ஏறிய இளைஞன்

பின்னர், என்னை எங்கு விட வேண்டும் என்று கேட்டபோது, சத்தார் புடவைக்கடை வீதியில் விடுமாறு கூறினேன். அங்கு என்னை இறக்கிவிடும்போது, அந்த முச்சக்கரவண்டியில் இருந்த ஒரு பெண், தான் சேலை (Saree) எடுக்கப் போவதாகவும், அதுவரை தன்னுடன் வருமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார்.

நான் சேலை கடைக்கு முன்னால் காத்திருப்பதாகக் கூறினேன். நான் குழந்தையுடன் அருகிலிருந்த நகைக்கடைக்குச் சென்று, அடகு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபா செலுத்தி மீட்டுக்கொண்டேன்.

பிரபல பாடசாலையில் அதிபர் செய்த முகம் சுழிக்கும் செயல் ; துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவன்

பிரபல பாடசாலையில் அதிபர் செய்த முகம் சுழிக்கும் செயல் ; துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவன்

மீண்டும் அந்தப் பெண் சொன்ன கடைக்கு வந்தபோது, அவர் முச்சக்கரவண்டி ஓட்டுநருடன் தொலைபேசியில் பேசிவிட்டு, எங்களை மணிக்கூட்டுக் கோபுரப் பகுதிக்கு வருமாறு கூறினார்.

நானும் அந்தப் பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிச் சென்று, மீண்டும் அதே முச்சக்கரவண்டியில் ஏறினோம். தொடர்ந்து முச்சக்கரவண்டி பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று ஓரிடத்தில் நின்றது.

மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்! | Shocking Testimony Woman Survived Batticaloa Well

அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய வீதியூடாக வவுணதீவு நோக்கிப் பயணித்தது. வலையிறவுப் பாலத்தைக் கடக்கும்போது, அந்தப் பெண் மூன்று குளிர்பானப் (Juice) போத்தல்களை வாங்கினார்.

மனைவி.. மகன்.. மகள்.. குடும்பத்துக்கே கடன் கொடுத்துள்ள விஜய்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!

மனைவி.. மகன்.. மகள்.. குடும்பத்துக்கே கடன் கொடுத்துள்ள விஜய்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!

எனது மகளுக்கும் அவருக்கும் பச்சை நிறக் குளிர்பானத்தையும், எனக்கு விளாம்பழக் குளிர்பானத்தையும் தந்தார். நான் அதனை அருந்தினேன். வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கிக்கொண்டார்.

அதன் பின்னர், ஒரு இளைஞன் கையில் கத்தியுடன் (தாள்கத்தி) அந்த முச்சக்கரவண்டியில் ஏறினார். அவர் ஏன் கத்தியுடன் ஏறுகிறார் என்று நான் கேட்டபோது, மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் செல்வதாகக் கூறினர்.

பணம் கேட்டு தொல்லை செய்த கள்ள காதலி; கொலை செய்து ஃப்ரிட்ஜில் பதுக்கிய கடற்படை ஊழியர்!

பணம் கேட்டு தொல்லை செய்த கள்ள காதலி; கொலை செய்து ஃப்ரிட்ஜில் பதுக்கிய கடற்படை ஊழியர்!

நான் என்னை தாண்டியடியில் இறக்கிவிடுமாறு கேட்டபோது, அதற்குச் சம்மதித்தனர். ஆனால், முச்சக்கரவண்டி கன்னங்குடா சந்தியூடாகத் தாண்டியடி நோக்கிச் செல்லாமல், பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கிச் சென்றது. ஏன் இந்த வீதியில் செல்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாகக் கூறினர்.

அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன். நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன்.

லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது. "வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?" என்று குழப்பமடைந்த நிலையில், தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன். இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், "அம்மா, அம்மா" என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். "மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?" என்று கத்தினேன்.

அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன். அப்போது யாரோ ஒரு சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US