காத்தான்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
காத்தான்குடி - கர்ப்பலா பிரதேசத்தில் வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது, 20 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் , பாதிக்கப்பட்ட சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் தாக்குதல் நடத்திய இளைஞன்
சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். இதன் போது வீதியில் நின்ற இளைஞன், சிறுவனைப் பார்த்து “என்னடா என்னை பார்க்கின்றாய்” என கேட்டு சிறுவன் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டார்.
இதனையடுத்து சிறுவன் கத்தியதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததுடன், கத்திகுத்து தாக்குதலை நடத்திய இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்ததுடன், சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்