அதிர்ச்சி தரும் வெனிசுலா ஜனாதிபதியின் தற்போதைய நிலை ; சொந்த நாட்டிலேயே ட்ரம்புக்கு எதிர்ப்பு
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது.அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வெனிசுலா மீதான டிரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் இருப்பு
மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர். வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் துணை அதிபரை, தற்காலிக ஜனாதிபதியாக நியமித்து வெனிசுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரோவும் அவரது மனைவியும் நியூ யார்க் அழைத்து வரப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர்கள் மீது பயங்கரவாத போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்தது.
மதுரோ நியூ யார்க் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.