பலரின் கண்ணீருக்கு மத்தியில் எடுத்துசெல்லப்படும் சாந்தனின் உடல் ; கதறி அழும் தாயார் (Video)
சாந்தனின் புகழுடல் சற்றுமுன்னர் அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் முடித்து வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்டது.
மகனை காண ஆவலோடு காத்திருந்த சாந்தனின் தாயாருக்கு மகன் உயிரிழந்த செய்தி பேரிடியாக அமைந்திருந்தது. 32 ஆண்டுகளின் பின்னர் தனது பிள்ளையை காணப்போகும் ஆவலில் காத்திருந்த தாயார் , இன்று மகனின் உடலுக்கு கதறி அழுது வழி அனுப்பிவைக்கும் சம்பவம் பல மனங்களை ரணமாக்கியுள்ளது.
கண்ணீர் கதறலுடன் எடுதுச்செல்லப்படும் சாந்தனின் உடல் தொடந்து பொது இடங்களில் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி 32 ஆண்டுகள் தமிழகத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த சாந்தன், விடுவிக்கப்பட்டு தயகம் திரும்ப காத்திருந்த நிலையில், சுகயீனமுற்று கடந்த 28 ஆம் திகதி சென்னையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.