பானுக ராஜபக்சவை அனுப்புங்கள்; ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் பானுக ராஜபக்சவை சேர்க்கவேண்டும் என கோரி கிரிக்கெட் இரசிகர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடற்தகுதியை அடிப்படையாக வைத்து பானுக ராஜபக்சவை அணியிலிருந்து நீக்குவது நியாயமற்ற விடயம் எனவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ள விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பானுகராஜபக்ச சிறந்த எதிர்காலம் உள்ள வீரர் அவர் சிறந்த முறையில் திரும்பிவருவார் என எதிர்பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சுயாதீன தெரிவுக்குழுவும் பயிற்சி ஆலோசகர் மகேலஜெயவர்த்தனவுமே இந்தியா செல்லவுள்ள அணியை தெரிவு செய்ததாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
