கம்பஹாவில் திடீரென காணாமல்போன பாடசாலை மாணவிகள்!
கம்பஹாவில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் மற்றும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இர் பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்றையதினம் (28-07-2023) காணாமல் போயுள்ளனர்.
மேலும், தரம் 11 மற்றும் தரம் 12 இல் கல்வி பயிலும் 16 மற்றும் 18 வயதுடைய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா பாடசாலை மாணவி பாடசாலை முடிந்து காணாமல் போனதாகவும் மற்றைய சிறுமி நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வேறு பாடசாலைக்கு செல்வதாகக் கூறி சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா பிரதேசங்களில் வசிக்கும் இந்த மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸாரும் வெலிவேரிய பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.