யாழில் பாடசாலை மாணவி 70 ஐ கடந்த வயோதிபரால் துஷ்பிரயோகம்!
யாழ்.சாவகச்சோி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணைகளின் பின்பே பூரண தகவல்களை வெளிப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தொிவித்துள்ளனர்.
மேலும் யாழ்மாவட்டத்தில் அண்மைக்காலமாக மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்துவருவதாக தெரிவிகப்படும் நிலையில், இவ்வாறான சமூக பிறழ்வான நடத்தைகளும் இடம்பெறுகின்றமை சமூக ஆர்வர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.