முச்சக்கர வண்டியில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் ; 42 வயது நபர் கைது
12 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பதில் நீதவான் நேற்று (07) உத்தரவிட்டார்.
கடுவெல, வெலிவிட்ட, போகஹவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
பியகம பொலிஸ் பல்வேறு புகார்கள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 06 திகதி பியகம பகுதியில் உள்ள களனி ஆற்றின் கரையோரத்தில் இரு பக்கங்களும் மூடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பாடசாலை சீருடை அணிந்திருந்த மாணவியுடன் இந்நபர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்தள்ளது.
சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியும், முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
பியகம பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.