புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்த பேறுபேறுகள்
2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம் செய்யப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தற்போது சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் அதிபர்களுக்கு உரிய விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவ் விண்ணப்பப் படிவத்தை தரம் 05இல் கல்வி கற்ற பாடசாலை அதிபரிடமிருந்து பெற்று பெற்றோர் அதனை முறையாக பூரணப்படுத்த வேண்டும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அதிபரிடம் மீண்டும் கையளிக்க வேண்டும் என்பதுடன், அதிபர் 2025.03.25ம் திகதிக்கு முன்னர் நிகழ்நிலை முறையில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் 2024ம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவர்களுக்கும் உரிய அதிபர்களுக்கும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.