கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை!
டோங்கோ தீவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ள நிலையில் அவற்றில் சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.
அந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை அமைந்துள்ளது. அந்த எரிமலையின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ளது. இந்நிலையில், அந்த தீவில் கடலுக்கு அடியில் எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது.
This is the moment tsunami waves crash into Tonga, after an underwater volcano erupted earlier on Saturday.
— 1News (@1NewsNZ) January 15, 2022
👉 Keep up with the 1News LIVE updates on this developing story: https://t.co/GRqRXeuqhV pic.twitter.com/kBG7nxSj51
இதனால், கடலில் சுனாமி அலை உருவானது. சுனாமி அலைகள் டோங்கோ தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. அதோடு குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருவதுடன் அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.