வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்
வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளர்.
இந்த நியமனத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும், அரசாங்கம் அதை கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த சரத் சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் நாளையதினம் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.