சாந்தனின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்
சாந்தனின் சடலம் இன்று (03.03.2024) மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் (03.03.2024) துக்கதினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று (03.03.2024) காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் சடலம் வைக்கப்பட்டு 9 மணியளவில் மாங்குளம் பகுதிக்கு எடுத்துவரப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி பசுமை பூங்காவில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக உடுப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு எதிர்வரும் (04.02.2024) எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.