நம்மை தெய்வீகத்தில் ஆழ்த்தும் சாம்பிராணியை இப்படி தான் செய்கிறார்களா?

Hinduism
By Yadu May 21, 2023 02:12 AM GMT
Yadu

Yadu

Report

மணக்க மணக்க பூஜை செய்யும் பொழுது வரக்கூடிய அந்த வாசம் தெய்வீகத்தை ஏற்படுத்துகிறது. வீடு அல்லது கோவில்களில் இந்த வாசம் நம் மனதை தூய்மைப்படுத்தி இறைவனை உணர செய்கிறது. அத்தகைய இந்த வாசம் காய்ந்த பூக்களில் இருந்து தான் உண்டாகிறது என்று கூறப்படுகிறது.

நம்மை தெய்வீகத்தில் ஆழ்த்தும் சாம்பிராணியை இப்படி தான் செய்கிறார்களா? | Sambrani Which Signifies The Divine

கம்ப்யூட்டர் சாம்பிராணி

இறைவனை நம்மை மனதால் உணர செய்யக் கூடியது தூப வாசனை, சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வைத்தால் தெய்வம்சம் நிறையும்.

அப்படிப்பட்ட இந்த சாம்பிராணி இன்று நவீன உலகில் கம்ப்யூட்டர் சாம்பிராணி வடிவில் கிடைக்கப் பெறுகிறது.

விதவிதமாக தயாரிக்கப்படும் இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி தான் காய்ந்த பூக்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

நம்மை தெய்வீகத்தில் ஆழ்த்தும் சாம்பிராணியை இப்படி தான் செய்கிறார்களா? | Sambrani Which Signifies The Divine

நிர்மால்யம் ஆன பூக்கள்

வீட்டில் சாமி படங்களுக்கு வைக்கும் பூக்களை நாம் காய்ந்த பின்பு நிர்மால்யம் என்கிறோம். இந்த நிர்மால்யம் ஆன பூக்களை குப்பையில் போடக்கூடாது என்பது சாஸ்திர நியதி ஆகும். எனவே இதை ஏதாவது ஒரு மரம் அல்லது செடிகளில் போட்டு விடுகிறோம்.

இப்படி காய்ந்த இந்த பூக்களை கொண்டே மணம் மிக்க சாம்பிராணி தயாரிக்கப்படுகிறது. வீட்டில் காய்ந்து சருகாகும் பூக்களை சேகரித்துக் கொண்டே வாருங்கள். ஓரளவுக்கு சேர்ந்த பின்பு அதை கைகளால் மொரமொறவென்று நொறுக்கி பிரித்து போடுங்கள்.

பின்னர் ஒரு இதனுடன் ஆறேழு ஏலக்காய்கள், நான்கைந்து கிராம்பு துண்டுகள், சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு சோம்பு ஆகியவற்றை நுணுக்கி சேருங்கள்.

வாசனைக்காக உங்களிடம் தெய்வாம்சம் நிறைந்துள்ள பொருட்கள் எது இருந்தாலும் சேர்க்கலாம். தசாங்கம் இருந்தால் அதையும் சிறிதளவு சேர்க்கலாம்.

நம்மை தெய்வீகத்தில் ஆழ்த்தும் சாம்பிராணியை இப்படி தான் செய்கிறார்களா? | Sambrani Which Signifies The Divine

சேர்க்க வேண்டிய பொருட்கள்

சந்தனம், பிரிஞ்சி இலை போன்றவற்றையும் சேர்க்கலாம். இப்படி அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிதளவு கற்பூரத்தையும் போட்டு இதனுடன் கடைசியாக அரை கைப்பிடி அளவிற்கு தூபம் போடக்கூடிய சுத்தமான சாம்பிராணியை பொடித்து சேர்க்க வேண்டும்.

பின் மிக்சியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து ஈரப்பதம் வர நன்கு கலந்து விடுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணெய், தேன், பன்னீர் போன்றவற்றையும் சேர்க்கலாம். இந்தந்த பொருட்களை தான் சேர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்களிடம் இருக்கும் சில பொருட்களை வைத்தே இப்படி தயாரிக்க முடியும்.

தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான். பின்னர் இதனை நன்கு கெட்டியாக பிடித்தால் பிடிபடும் அளவிற்கு செய்து கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கோன் அல்லது உருளை வடிவங்களில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

கோன் வடிவில் செய்வதற்கு பிளாஸ்டிக் கவர் ஒன்றை கோன் வடிவில் வெட்டி அதை சுருட்டி அதனுள் இந்த கலவையை வைத்து அமுக்கி பின்னர் கவரை பிரித்தால் அழகாக வரும். உருளை வடிவம் கிடைக்க வேண்டும் என்றால் இதே போல பாலிதீன் கவரை கொண்டும் செய்யலாம் அல்லது உங்களிடம் காலியான சிரஞ்ச் இருந்தால் அதற்குள் வைத்து பிரஸ் செய்தால் அழகாக வெளியில் வரும்.

இந்த முறையில் நீங்கள் தயாரித்து நன்கு வெயிலில் இரண்டு நாட்கள் காய விட வேண்டும். காய்ந்த பின்பு எடுத்து நீங்கள் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதிலிருந்து வரக்கூடிய நறுமணம் தெய்வீகத்தை உணர செய்யும். நீங்களும் வீட்டில் இதை செய்து பயனடையுங்கள்.

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US