குங்கும பூ பரிகாரம் ; ஜோதிடம் கூறும் ரகசியம்!
குங்குமப்பூ வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க தாந்திரீக பரிகாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்களுக்கு குங்குமப்பூ கொண்டு செய்யப்படும் பரிகாரம் மூலம் நல்லதொரு தீர்வு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
சுக்கிரதோஷம்
சுக்கிரதோஷம் இருந்தால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஓயாத சண்டை சச்சரவு இருக்கும்.
சுக்கிரனால் தம்பதிகளிடையே ஏற்பட்ட பிரச்னைகள் தீர குங்குமப்பூ, தேன், உள்ளிட்ட பொருட்களை ஏழை பெண்ணுக்கு தானமாக அளிக்கலாம்.
சுக்கிர கிரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தை சண்டை போட்டுக்கொண்டிருக்கும் தம்பதியினர் திங்கட்கிழமையன்று சிவபெருமானை குங்குமப்பூ சேர்த்த பால் அபிஷேகம் செய்யலாம்.
பின்னர் குங்குமப்பூவினால் பொட்டு வைத்துக் கொள்ளவும். 11 திங்கட்கிழமை இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டியது
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சந்தனம், செந்தூரம் உடன் குங்குமப்பூவை கலந்து அரைத்து பொட்டு வைத்து கொள்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தீய விளைவுகள் நீங்கும்.
வீட்டில் பண பிரச்சினை, வேலை இழப்பு ஏற்பட்டவர்கள் மகாலட்சுமியின் அருள் பெற ஒரு வெள்ளைத் துணியில் குங்குமப்பூவை வைத்து உங்கள் பண அலமாரியில் வைக்கலாம்.
மகாலட்சுமியின் அருள்
இதன் மூலம் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். பொன் நகை ஆபரணங்கள் சேரும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். குளித்து விட்டுதான் குங்குமப்பூவை தொட வேண்டும்.
ஒருபோதும் நீங்கள் குளிக்காமல் குங்குமப்பூக்களை தொடக்கூடாது.
தொழில் வியாபார ஸ்தலங்களில் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் குங்குமப்பூவை அரைத்து பணம் வைக்கும் பெட்டி அருகே ஸ்வஸ்திக் சின்னம் வரையலாம்.
முக்கியமான ஆவணங்களில் குங்குமப்பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இதன் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும் என்றும் ஜோதிடம் கூறுகின்றது.