மஹிந்தவை சந்தித்த எஸ்.ஜெய்ஷங்கர்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுகள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வியாழக்கிழமை (20) பல முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.
அந்தவகையில் ஜனாதிபதி ரணில் மற்றும் பிரதமர் தினேக்ஷ் குணவர்த்தனவையும் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் சந்தித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
சந்திப்பின் போது இந்தியா - இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை - இந்திய இருதரப்பு ஒத்துழைப்புக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுவதாக அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.