பொய்பிரச்சாரம்... சமூக ஊடகங்களை மொத்தமாக முடக்கிய புடின்!
ரஷ்யாவில் முகநூலை தொடர்ந்து டுவிட்டருக்கும் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கை (போர்) குறித்து முகநூல் மற்றும் டுவிட்டரில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இதெவேளை, உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யா டுடே, ஸ்புட்னிக் போன்ற ரஷ்ய அரசு ஊடகங்கள் ஐரோப்பாவில் ஒளிபரப்பாவதை முகநூல் நிறுவனம் தடுத்தது. இதைத் தொடர்ந்து ரஷியாவில் முகநூல் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்தது.
ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதால் ரஷியாவில் முகநூல் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு கூறியது.
இந்நிலையில் தற்போது முகநூலை தொடர்ந்து டுவிட்டருக்கும் ரஷ்யாவில் தடை விதிக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.