ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை: ஜோ பைடன் உட்பட 963 அமெரிக்கர்களுக்கு நேர்ந்த நிலை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக ரஷ்யா பயணத்தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 88 வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. ரஷ்ய துருப்புகளின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
போர் தொடங்கிய நாள் முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்கி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டின் படை வலிமையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டிற்கு 4,000 கோடி டொலர் நிதியுதவி வழங்கும் மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளால் ரஷ்யா அமெரிக்காவுடன் மோதல் போக்கை கையாண்டு வருவதுடன், தற்போது அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டனி பிளிங்கன் உட்பட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.