ரஷ்யா மற்றும் இலங்கைக்கிடையே ஒருங்கிணைந்த சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்!
ரஷ்யா மற்றும் இலங்கைக்கிடையே ஒருங்கிணைந்த சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அண்மையில் அந்நாட்டின் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த பிரதானிகளைச் சந்தித்து உரையாடினார்.
ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் விசேட ஊக்குவிப்புத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிட்டதுடன், குறித்த வேலைத்திட்டத்திற்காக முழுமையான ஆதரவினை வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ரஷ்யா சுற்றுலா முகவர் நிலையத்தின் பிரதானி Elena V Lysenkova மற்றும் அவரது குழுவினர் தெரிவித்திருந்தனர்.