17 நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை!
உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போரில் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு செயற்பட்டு வரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12 நாட்களாக போர் தாக்குதலை தொடுத்து வருகின்றது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்றைய தினம் 3-ம் கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விடயத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷ்ய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.