RRR படத்தை பார்க்க வந்த நபரால் ஏற்பட்ட பரபரப்பு! வைரலாகும் காணொளி
தென்னிந்திய சினிமாவில் பிரமாண்டமாக திரைப்படங்களை இயக்கியவர்தான் இயக்குநர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியான அனைத்துத் திரைப்படங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி 1, பாகுபலி 2 படங்கள் மக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகையே பிரமிப்பில் ஆழ்த்தியது.
இந்தநிலையில் இவர் தற்பொழுது RRR என்ற வரலாற்றுப் படத்தை இயக்கியுள்ளார் . இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர், கதாநாயகனாக நடித்து இருக்கின்றனர்.
From extreme #swag to #RRR screening to prison, all in one day for this man. Thread in videos.
— Krishnamurthy (@krishna0302) March 25, 2022
Here's #1 pic.twitter.com/fcFm4KvdK0
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இத்திரைப்படம் இன்றைய தினம் வெளியாகியதோடு படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது.
இந்த நிலையில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் திரையரங்கு ஒன்றில் ஒரு நபர் நிஜ துப்பாக்கியை எடுத்து வந்து இருக்கிறார். பாலாஜி என்ற அந்த நபர் நீண்ட தாடி, முடி உடன் இருப்பதை பார்க்கும் போது நிஜ ரௌடி போல இருந்தார்.
அவரை காணொளி எடுக்கும்போது அது நிஜ துப்பாக்கியா என கேட்க அவரும் ஆம் என கூறினார். அதில் ஒரே ஒரு புல்லட் மட்டும் இருக்கிறது என அவரை அங்கிருக்கும் பொலிஸார் கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து இருக்கின்றனர்.
துப்பாக்கியை எடுத்து வந்தது ஏன் என தற்போது பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.