செல்ஃபியால் சிக்கிய கொள்ளையர்கள்!
கூரிய ஆயுதத்தைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து யுவதியின் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் செல்ஃபியால் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொள்ளைச் சம்பவம் இடம்பெறும்போது யுவதி தனது கையடக்கத் தொலைபேசியில் எடுத்துக் கொண்ட செல்ஃபி உதவியால் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோயின்
அதோடு கைதான சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹோமாகம பிடிபன, சுவபுதுகம பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமாக இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதன்போது, அவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொள்ளைச் சம்பவமும் அம்பலமாகியுள்ளது.
மேலும் சந்தேக நபர்களிடமிருந்து கூரிய கத்தியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.