மீண்டும் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
இன்றிலிருந்து இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்சி ஆவணங்களை திறப்பதற்கு தங்களிற்கு உள்ளுர் வங்கிகள் அனுமதிவழங்க மறுக்கின்றதாக சமையல் எரிவாயு இறக்குதியில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக சமையல் எரிவாயுவிற்கு பெருந்தட்டுப்பாடு ஏற்படலாம் என அந் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை தன்னிடம் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு இன்றுடன் முடிவடைகின்றது என லாவ்ஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் டபில்யூ கே எச் நிறுவனத்தின் தலைவர் வெகாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது எரிபொருளிற்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் மற்றுமொரு பாரிய விவகாரமாக இது மாறப்போகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.