இலங்கையில் உணவகங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் உள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி குறித்த 18 வீதமான உணவகங்கள் மற்றும் விடுதிகள் திருப்தியற்ற நிலையில் காணப்படுவதால் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இலங்கையில் தற்போதுள்ள 18% விடுதிகள் மற்றும் உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுகளை உற்பத்தி செய்கின்றன.
மேலும் 27% உணவகங்கள் சாதாரண நிலையில் உள்ளன. 55% உணவகங்கள் மிகவும் சிறந்த நிலையில் உள்ளன.
இலங்கையில் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தொடர்பில் 2022ல் பொது உணவு நுகர்வு சுகாதார ஆய்வாளர்கள் இணைந்து உணவாக தரவு வகைப்படுத்தல் நிறுவனங்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தரவுகளின்படி குறித்த விடயம் வெளிப்படுத்தப்படுகிறது.
இது தொடர்பில் குறித்த உணவகங்களுக்கு மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுகளின் உற்பத்தியை நீக்குதல், அது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.''என உபுல் ரோஹன தெரிவித்தார்.