இலங்கையின் முக்கிய விடயம் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்
நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அனுமதிப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களின் நிலைமையை ஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மா ணிக்கப்படாமையால் நீண்டகால மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 2016ஆம் ஆண்டு இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என தமது ஆணைக்குழுவும் எச்சரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்துவிட்டு முடிந்த வரை மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.