யாழில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரால் மீட்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனது. இதன்போது மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், மோட்டார் சைக்கிள் காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அல்லாரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
இன்றையதினம் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.